×

தந்தையுடன் விளையாடியபோது 5வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை பலி

திருப்போரூர்: நாவலூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. திருப்போரூர் அருகே நாவலூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மணிகண்டன் (33). இவர், தனது மனைவி மற்றும் மகன் ஆரவ் (3) ஆகியோருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில், தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியின் பால்கனியில் குழந்தையுடன் மணிகண்டன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக குழந்தை ஆரவ் திடீரென நிலை தடுமாறி 5வது மாடியில் இருந்து கீழே விழுந்தான்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன், உடனடியாக லிப்டில் கீழே வந்து, பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய குழந்தையை மீட்டு, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், தலையில் பலத்த காயமடைந்ததால் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தாழம்பூர் போலீசார், குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post தந்தையுடன் விளையாடியபோது 5வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Tirupporur ,Nawalur ,
× RELATED கார் மோதி கல்லூரி பேராசிரியர் பலி